Thursday, August 27, 2015

காற்றில் நானும் தவழ்ந்து வருவேன் - 2007

உன் பூவிரல் கொண்டு
தம்புரா தந்திகள் நீ வருட
நாணிய அவற்றின் சிரிப்பொலி
ஸ்வரங்களாய் உன் செவி அடைய
லயித்து ஒரு கணம் மெலிதாய்
ஒரு புன்னகை பூக்க கண்டு
அவற்றுடன் நானும்
ஒரு ஸ்வரமாய் ஒட்டிக்கொண்டு
உன் செவிக்குள் சென்று
உன் இதயம் தனை கவர
இன்று கொண்டு தினம் தினம்
காற்றில் நானும் தவழ்ந்து வருவேன்

No comments:

Post a Comment