உன் பூவிரல் கொண்டு
தம்புரா தந்திகள் நீ வருட
நாணிய அவற்றின் சிரிப்பொலி
ஸ்வரங்களாய் உன் செவி அடைய
லயித்து ஒரு கணம் மெலிதாய்
ஒரு புன்னகை பூக்க கண்டு
அவற்றுடன் நானும்
ஒரு ஸ்வரமாய் ஒட்டிக்கொண்டு
உன் செவிக்குள் சென்று
உன் இதயம் தனை கவர
இன்று கொண்டு தினம் தினம்
காற்றில் நானும் தவழ்ந்து வருவேன்
தம்புரா தந்திகள் நீ வருட
நாணிய அவற்றின் சிரிப்பொலி
ஸ்வரங்களாய் உன் செவி அடைய
லயித்து ஒரு கணம் மெலிதாய்
ஒரு புன்னகை பூக்க கண்டு
அவற்றுடன் நானும்
ஒரு ஸ்வரமாய் ஒட்டிக்கொண்டு
உன் செவிக்குள் சென்று
உன் இதயம் தனை கவர
இன்று கொண்டு தினம் தினம்
காற்றில் நானும் தவழ்ந்து வருவேன்
No comments:
Post a Comment