Thursday, August 27, 2015

என் கண் மழை விழும்போது எதில் காப்பாய் ? - 2007

வான்மழை  விழுந்த  நாளில்
கை  கோர்த்து  ஆடி  களித்து
மழைத்துளிகள்  கீழே  வர
என்  கரங்களை  பற்றிக்கொண்டு
உள்ளங்கையில்  ஓர்  நீர்த்துளி  விழ
'நம்  காதல் இது , காத்து  வை ' என்றாய்
அம்மழை  நின்று  தெளிந்த  பின்னும்
சொல்லிற்க்கிணங்கி  நான்  அப்படியே  நிற்க,
கடமை  முடித்து  மறைந்த  மேகங்கள் போல்
சொன்ன  காதல் பொய்யென  நீ  சென்று விட்டாய்
இல்லாத  நீர்த்துளி  இன்றும்  காப்பாவனுக்கு  ஒன்று  சொல்
என்  கண் மழை  விழும்போது  எதில் காப்பாய் ?

1 comment: